இப்பிறவி தவமே

A Tamil poem about the gift of life.

Published
Reading time1 min read
இப்பிறவி தவமே

இப்பிறவி தவமே
இறைவன் தந்த வரமே
இல்லறம் சேர்வது இன்னொரு முகமே
இதயமெல்லாம் இன்ப நிறமே

வன்சொல்லால் வலிகொண்ட மனமே
விலகியது பழிச்சொல் இக்கணமே
வருவது நம்போர் சொல்லும் இனமே
வருந்தாதே வெல்லலாம் இனிமே

நம்மைத் தூற்றியோரை தூரம் விடு
நன்மை வார்பொற்க்கு விலாசம் கொடு
நம்மை சூழ்ந்தோர்க்கெல்லாம் நளபாகம் இடு
நிரைபின், மனதால் பெரியோரிடம் ஆசிநாடு

செந்தமிழ் வம்சமாய்,செல்வத்தின் அம்சமாய்
செய்யுள் பிழையற்று செப்பென
செதுக்கிடுவோம், சேய்தன் வாழ்வினை
சிற்பமாய், சீர் மணவாளனாய்,

பைந்தமிழ் சொல்லுரைத்து தொடர்வோம்
பொதுமறை பால் அனைத்தும் அருள்வோம்,
ஐம்புலனும் ஆற்றல்பெற ஆயர்கலையும் உரைப்போம்
ஓம்காரம் செய் உணர காத்திருப்போம்

கார்முகில் கண்ணனோ, குறிஞ்சி கந்தனோ
கலைமகளோ, திருமகளோ, மறைமகளோ
காணத்துடித்து ஆவால் கொண்டேனோ

எனை ஆளும் சிவமே
எந்நாளும் அருள்வாய் ஜெயமே
எல்லாம் இனி சுகமே ..